Posts

Showing posts from 2023

2003 - 2023

க்ரிக்கெட் எனக்கு அறிமுகமானபோது, ரப்பர் பந்து என்பது எங்களுக்கு ஓர் ஆடம்பரம்.  குக்கிராமமான எங்கள் ஊரில் நாங்கள் க்ரிக்கெட் பந்தாகப் பயன்படுத்தியது, 'ஊமாங்கொட்டை' என்று அழைக்கப்பட்ட காய்ந்த பனங்கொட்டையைத்தான்.  ஐந்து ரூபாய் இருந்தால், கொளப்பலூரிலோ கோபியிலோ ரப்பர் பந்து வாங்கிக் கொள்ளலாம். 'ஹீரோ' என்றொரு பந்து இருந்தது. அது போக சற்றே சின்ன சைஸில் 'பெப்ஸி' பந்தும் கிடைக்கும். யார் காசு கொடுத்து வாங்குகிறார்களோ, அந்த நபர் வரும்போது மட்டுமே அதனைக் கொண்டுவருவார்கள். அதுபோக, பந்து எங்காவது வேலிக் காட்டுக்குள் தொலைந்து விட்டால், தேடிக் கண்டுபிடிப்பது பெரும்பாடு. தேடும்போது சில நகைச்சுவை சக்ரவர்த்திகள் "இங்க பாரு... பந்து இல்ல" என்றோ, "அட இங்க பாரு... ஒரு விட்ட கெடக்குது" என்றோ சொல்லி பெருமையுடன் எல்லோரிடமும் கெட்ட வார்த்தை வாங்கிக் கொள்வார்கள். அப்படி அவர்கள் சொல்லும் போது, அந்தத் தொனியில் ஏமாந்து எத்தனை பேர் பந்து கிடைத்ததென அவர்களைப் பார்க்கிறார்கள் என்பதில்தான் சொல்பவருக்குப் பெருமிதம். ஆனால், ஊமாங்கொட்டைகள் எக்கச் சக்கமாகக் கிடைக்கும் என்பதால், ...

ஒரு சனிக்கிழமை காலை

சித்தோடு பேருந்து நிறுத்தத்தைத் தாண்டும் போது, 'செந்தில் சார்' நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தான். உண்மையில் அவருடைய பெயர் 'செந்தில் சார்' இல்லை. அவன்தான் அவருக்கு மானசீகமாக அந்தப் பெயரைச் சூட்டியிருந்தான். தனது புரொஃபஸர் திரு. செந்தில் அவர்களைப் போலவே இருந்ததால், அந்த இரகசியப் பெயர். பெயருக்கு உரித்தானவருக்கே தெரியாத அளவுக்கு இரகசியம். பெயர் தெரியாத அளவுக்கு அவர் அன்னியரும் இல்லை. தினமும் இரண்டு பேருமே சித்தோட்டில் பஸ் ஏறுபவர்கள் தான். இருவருமே ஒரே பள்ளியில் வேலை செய்பவர்கள்தான். இருவரும் பேசிக்கூட இருக்கிறார்கள். அவன் அந்தப் பள்ளியில் சேர்ந்த அந்த ஒரு மாதத்தில், அந்தப் பள்ளியில் அவனைவிடக் குறைவாகப் பேசிய ஒரே நபர் செந்தில் சார்தான்.  அவர் கோபியிலிருந்து வருபவர். வள்ளிப்புரத்தான் பாளையத்திலிருக்கும் பள்ளியிலிருந்து பள்ளிப் பேருந்து எதுவும் கோபி வரைக்கும் போகாத காரணத்தால், காலையில் ஆறரை மணிக்கு கோபியில் பஸ் ஏறி, ஏழே காலுக்கு சித்தோட்டை அடைந்து, டீக்கடையில் இரண்டு மெதுவடைகளையும் ஒரு  டீயையும் காலை உணவாக எடுத்துக் கொண்டு, ஏழரைக்கு நிறுத்தத்துக்கு வரும் பஸ்சுக்காக ஏழு இருபதுக...

ஓ! உலகோரே!

கவிஞர்களின் மனங்கள் தான்  எத்துணை அழகானவை! பறவைகளை  இரசிக்காதவர்களை, சடங்குகளை சடங்குகளாக மட்டுமே சமைத்து விட்டவர்களை, இசை கேட்டும் இசையாதர்களை, உண்மையை முகங்கொள்ளத் துணியாதவர்களை, பொய்களைக் கொண்டே ஆசுவாசப் படுபவர்களை, இயல்பினை மறைக்கும் எந்திரங்களை, பிரபஞ்சத்தையே  வெல்லும் பராக்கிரமர்களை, எல்லாம் அறிந்த அதிமேதாவிகளை,  காதலால் கசிந்துருகாதவர்களை, தூங்கும் குழந்தைகளை எழுப்புபவர்களை, அளவிட்டு சிறுநீர் கழிக்கவல்ல பரிபூரணவாதிகளை, உன்மத்தம் உணராதவர்களை, கவிதையையோ கவிஞரையோ கிஞ்சித்தும் உணர முடியாத் துர்பாக்கியசாலிகளை, இத்தகையோரின் பல்லாயிரம் கோடிப் பிரதிகளை, அனுசரித்துப் போகும் கவிஞர்களின் மனங்கள்தான் எத்துணை அழகானவை! கவிஞர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்! அவர்களின்  மொழியை எவரும் பேசுவதில்லை, அவர்களின் பேச்சில் தர்க்கம் வாய்ப்பதில்லை, முழுப் பைத்தியம் அவர்களுக்கு எட்டுவதில்லை, தமதறிவை தாமே  நொந்து கொள்பவர்களே அவர்கள், சொல்ல வருவதை அவர்களால் சொல்லவே முடிவதில்லை, நகையாடுவோருக்கு கேளிக்கையும் நேசிப்போருக்கு வலியையும் அளிக்க வேண்டுமெனச் சபிக்கப் பட்டவர்கள் அவர்கள். ஆனால...

அருஞ்சொற்பொருள் - 2

இதுவரை... எந்தச் சூழலுக்காக, என்ன அர்த்தத்தில் பாடலாசிரியரால் எழுதப்பட்டதோ,  அச்சூழல், அவ்வர்த்தமன்றி - அந்தக் குறிப்பிட்ட பாடலாசிரியரே கூட யோசித்திருக்க வாய்ப்பில்லாத - வேறொரு அர்த்தமுடைய மற்றும் வேறொரு கற்பனையான சூழலுக்கும் பொருந்திப் போகக் கூடிய திரைப்படப் பாடல் வரிகளைப் பற்றி பேசி வருகிறோம். இனி... இந்தப் பாட்டின் வரிகளைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு இரண்டு நபர்களைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இருவர். #### இவர்கள் பேசுவது பெரும்பான்மையோருக்குப் பிடிக்காமல் போகலாம். ஏனென்றால், 'சரி' 'தவறு' என்ற பாகுபாடுகள் ஏதும் இல்லாமல் இயல்பு எனும் பேருண்மையை உணர்ந்தவர்கள் இவர்கள்.  பெண்ணுடலின் வனப்பை இரசிக்காமல் இருப்பதாய் நடிக்கும் ஆண்கள் இல்லை இவர்கள். எதிர்பாலினம் மீதோ, நேர் பாலினம் மீதோ ஓர் ஆணோ பெண்ணோ ஈர்க்கப் படுவதும், அவர்களது மனம் விரும்பாவிட்டாலுமே கூட அவர்களது கண்கள் அனிச்சையாகவே ஈர்த்தவர்களை நோட்டமிடுவதும் தவறும் அல்ல, சரியும் அல்ல. அதுதான் உயிர் கொண்டு நடமாடும் எந்தவொரு உடலின் இயல்பு என்று இவர்களுக்குத் தெரியும்.  ம...

அருஞ்சொற்பொருள் - அறிமுகமும் முதல் பொருளும்

ஒரே ஓர் இடத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும் சொற்கள் ஏராளம் உள்ளன நம்மிடம்.  முற்றும், வாழ்த்துதுமே, மட்டு, யாதும், கோடிட்ட - என்று நீளும் இவ்வரிசையில் அருஞ்சொற்பொருள் என்ற வார்த்தையும் ஒன்று.  பள்ளிப் பாடத்தின் தமிழ்ப் புத்தகத்தில் ஒவ்வொரு பாடத்துக்கும் பிற்பகுதியில் மட்டுமே இடம்பெறக் கூடிய, அருகி வரும் உயிரினமே இவ்வார்த்தை.  அருமை + சொல் + பொருள் என்ற இவ்விணைப்பில் 'அருமை' என்ற சொல்லின் பொருள் 'அரிதான' என்பதாம். அரிதான சொற்களுக்கான அர்த்தமே 'அருஞ்சொற்பொருள்'.  ஓரிட வாசிகளான இவ்வார்த்தைகளை வேறிடத்தில் பயன்படுத்திப் பார்த்தால், அந்தப் புதுமையே ஓர் அழகைத் தருகிறது.  இந்த உதாரணங்களைப் பாருங்களேன்.  கோடை வெயில் ஆனியில் முற்றும். எங்கள் ஊருக்கு வருகை புரிந்திருக்கும் எழுத்தாளரை யாம் வணங்கி வாழ்த்துதுமே. எனது அன்புக்கு மட்டில்லை. யாதும் அவன் செயல். கோடிட்ட சட்டை. அதைப் போலவே, அருஞ்சொற்பொருளையும் புத்தகத்திலிருந்து பிய்த்தெடுத்து இங்கே பயன்படுத்திக் கொள்ள விழைகிறேன்.  இங்கே இது அருமை + சொற்பொருள் ஆகிறது. அதாவது, இங்கே அருமையானது சொல் அன்று. சொல் அன்றாடச் சொல...