முற்றும்
முற்றும் ஒருமுறை நீதிமண்டபத்தை நாடியது. முற்றும் என்றால் முற்றும் என்ற தமிழ்ச்சொல்தான். அது எதிர்த்து வழக்குத் தொடுத்த எழுத்து இப்போதுதான் ஆரம்பித்துள்ள இந்தக் கதையில் ஏற்கனவே இரண்டு முறை வந்துவிட்டது. " தான் " தான் அந்த எழுத்து. முற்றுமின் புகார்க்கடித வடிவ வாதம் இதுதான். " முற்றும் , தான் ஆகிய இரண்டுமே தமிழ்ச்சொற்கள்தான். இரண்டிலுமே இரண்டு ஜாதி எழுத்துகளுமே சரிவிகிதமான பெரும்பான்மையுடன்தான் உள்ளன. வல்லின, மெல்லின ஜாதிகள்தான். முற்றுமைக் காட்டிலும் தான் எந்த விதத்திலும் ஒருபடியேனும் உயர்ந்தது என்று சொல்ல எந்தவொரு ருசுவும் இல்லை. அப்படியிருக்க, முற்றுமுக்கு ஏன் ஓர் அநீதி காலங்காலமாக இழைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது? இட ஒதுக்கீடுதான் அந்த அநீதி. எங்கும் நிறை பரப்பிரம்மமாக, எங்கும் விரி ஆகாசமாக தான் எங்கெங்கும் நிரம்பியிருக்க, உதிர்வதற்காக மட்டுமே முளைக்கும் மயிரைப் போல, காலங்காலமாக புதினங்களை முடித்துவைக்கும் 'எழவு' வேலைக்காக மட்டுமே முற்றும் பரம்பரை பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. அதிலும் பற்பல சிக்கல்கள். அவையாவன, 1) புதுமைவிரும்பி புண்ணாக்குகள் ச...