Posts

Showing posts from August, 2025

விசேஷம்

அமைதியான குளம். கல்லை எறிகிறீர்கள். சஞ்சலப்படுகிறது. "சஞ்சலப்படாதே குளமே!" என்று அக்கறை பொழிகிறீர்கள். _______________________________________ தெளிவான மனம். "வீட்ல விசேஷமா?" என்கிறீர்கள். இல்லையென்று சொன்னால், ஆறுதல் வாசிக்கிறீர்கள்.  _______________________________________ My mind be like, "நாம் பாட்டுக்கு செவனேன்னு தான்டா இருந்தேன்?" _______________________________________ இனிமேல் சொல்லலாமென இருக்கிறேன். "வீட்ல விசேஷமா?" "ஆமா. நாளைக்கு எனக்கு சுன்னத் கல்யாணம். நிச்சயம் வரணும்." _______________________________________

நோட்டிஸ்

துணிக்கடையில் ஒரு நோட்டிஸ் பணியாளர்கள் யாரும் லிஃப்ட் பயன்படுத்தக் கூடாது. மீறினால் அபராதம். சர்வ நிச்சயமாக, அந்த நோட்டிஸையும் பணியாளர்கள் தான்  ஒட்டியிருப்பார்கள். 

இன்புற்றிருத்தல்

Mihaly Csikszentmihalyi எழுதிய Flow என்ற புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். மகிழ்ச்சியாயிருக்க மனதைப் பழக்குதல் பற்றிப் பேசுகிறது இப்புத்தகம். ஆன்மிக ரீதியான தத்துவங்களாக இல்லாமல் -- உளவியல், மூளை நரம்பியல் போன்ற அறிவியல் துறைகளின் கோணத்தில் மகிழ்ச்சி குறித்து ஆராய்வதே இப்புத்தகத்தின் சிறப்பு.  அதிலே நான் ஒரு குறிப்பிட்ட செய்தியைப் படித்தபோது, "அட, இதைத்தான் நாம் ஏற்கனவே செய்து கொண்டிருக்கிறோமே!" என்று யாருக்கும் பாதகமில்லாத ஓர் அகந்தை தோன்றியது. அது குறித்துப் பகிர விரும்புகிறேன்.  (Pleasure எனும் இன்பம், enjoyment எனும் களிப்பு, happiness எனும் மகிழ்ச்சி ஆகிய‌ மூன்றையும்‌ தெளிவாக வேறுபடுத்திக் காட்டுகிறது புத்தகம். அதுகுறித்து விரிவாக நான் சொல்லப் போவதில்லை.) சரி, புத்தகம் சொன்ன செய்தி என்ன? நாம் அன்றாடம் செய்யும் ஒரு சாதாரண செயல் கூட நமக்கு பெருங்களிப்பைத் தரக்கூடியதாக மாற்ற முடியும்.  அதற்கு நாம்‌ என்ன செய்ய வேண்டும்? அந்த அன்றாடச் செயலிலே இலக்குகளையும் விதிகளையும்‌ நாம் நிர்ணயிக்க வேண்டும். சரி. இப்போது என்னுடைய அனுபவத்தைப் பற்றிச் சொல்கிறேன்.  அன்றாடச் செயல்:...