வெறுப்பு பிரச்சாரம்
திமுக-வில் உறுப்பினராக இருக்கும் நண்பர் ஒருவர் ஒரு மீம் ஸ்டேட்டஸ் வைத்திருந்தார். அதில் இருந்ததை அப்படியே தருகிறேன். "இப்ப என்ன... ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு 7 அமைச்சர் பதவி குடுத்ததுக்காக ஃபயர் விடனும்.. அதானே..?! சிறப்பா விட்டு விடுவோம்... உனக்கு இல்லாததா...?! ஒன்னு மட்டும் பண்ணு... விசிக வன்னியரசுக்கு கொடுத்த ஆதி திராவிடர் நலத்துறையை ஸ்ரீரங்கம் எம்எல்ஏ கிட்ட குடுத்துட்டு, அவருகிட்ட இருக்குற அறநிலையத்துறையை வன்னியரசுகிட்ட கொடு... நானே முன் வரிசையில நின்று, மூணு ஃபயர் விடறேன்...!" முதலில் இந்தப் பதிவில் இருக்கும் தர்க்கத்தைப் பார்ப்போம். பிறகு இதில் இருக்கும் மொழி அரசியலைப் பேசுவோம். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பட்டியலின சமூகத்தைச் சார்ந்தவர் ஒருவர் வரவேண்டும் என்ற அவரது கருத்தை நான் வரவேற்கிறேன். அது ஒரு புரட்சிகரமான கருத்து. மாற்றுக் கருத்தே இல்லை எனக்கு. என்னுடைய இன்னொரு கருத்தையும் சொல்கிறேன். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் Women Empowerment Cell என்ற ஒன்று இருக்கும். அதற்கு ஒருங்கிணைப்பாளராக ஏன் எப்போதும் பெண்களையே நியமிக்கிறார்கள் என்று யோசித்தால், திரு. வன்ன...