Posts

வெறுப்பு பிரச்சாரம்

திமுக-வில் உறுப்பினராக இருக்கும் நண்பர் ஒருவர் ஒரு மீம் ஸ்டேட்டஸ் வைத்திருந்தார். அதில் இருந்ததை அப்படியே தருகிறேன்.  "இப்ப என்ன..‌. ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு 7 அமைச்சர் பதவி குடுத்ததுக்காக ஃபயர் விடனும்.. அதானே..?! சிறப்பா விட்டு விடுவோம்... உனக்கு இல்லாததா...?! ஒன்னு மட்டும் பண்ணு... விசிக வன்னியரசுக்கு கொடுத்த ஆதி திராவிடர் நலத்துறையை ஸ்ரீரங்கம் எம்எல்ஏ கிட்ட குடுத்துட்டு, அவருகிட்ட இருக்குற அறநிலையத்துறையை வன்னியரசுகிட்ட கொடு... நானே முன் வரிசையில நின்று, மூணு ஃபயர் விடறேன்...!"  முதலில் இந்தப் பதிவில் இருக்கும் தர்க்கத்தைப் பார்ப்போம். பிறகு இதில் இருக்கும் மொழி அரசியலைப் பேசுவோம். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பட்டியலின சமூகத்தைச் சார்ந்தவர் ஒருவர் வரவேண்டும் என்ற அவரது கருத்தை நான் வரவேற்கிறேன். அது ஒரு புரட்சிகரமான கருத்து. மாற்றுக் கருத்தே இல்லை எனக்கு.  என்னுடைய இன்னொரு கருத்தையும் சொல்கிறேன். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் Women Empowerment Cell என்ற ஒன்று இருக்கும். அதற்கு ஒருங்கிணைப்பாளராக ஏன் எப்போதும் பெண்களையே நியமிக்கிறார்கள் என்று யோசித்தால், திரு. வன்ன...

"அம்மா இருந்திருந்தால் இவர் வந்திருக்க முடியுமா?" "கலைஞர் இருந்திருந்தால் இவர் வந்திருக்க முடியுமா?" "தலைவா படத்துக்காக கைகட்டி நின்றது ஞாபகமில்லையா?" இன்னொருவர் வந்துவிடவே கூடாது என்று அடக்குவதும், கருத்து சுதந்திரத்தை நசுக்குவதும் தான் பாசிசம் . மிரட்டியவரை கெத்தாகவும் மிரட்டப்பட்டவரை எள்ளலுடனும் பார்ப்பது அநீதி. அது சரி. ஒரு பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டால் "அவள் ஏன் அங்கே போனாள்?" என்று கேட்பவர்கள்தானே நாம். 

தேர்தல் நெருங்கும் சமயத்தில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.  தேர்தல் நெருங்கும் சமயத்தில் அறிவுத் திருவிழாக்கள் நடத்தப்பட்டன. ஆங்கிலப் பத்திரிக்கையில் வந்த ஒரு செய்தியைப் படித்துக் காட்டிய ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டார். உலகத்தில் சன் நெட்வொர்க்கைத் தவிர வேறு மீடியாவே எதுவும் இல்லை என்று நம்புவதற்குப் பெயர்தான்... You know it if you know it. 

என்னுடைய அரசியல் புரிதல்

முன்னுரை ஆட்சியாளர்கள் நம்முடைய சேவகர்கள். எஜமானர்கள் இல்லை. அவர்கள் நமக்கு செய்வது அவர்களின்‌ கடமை . உதவி இல்லை. அதற்காக   ஆயுள் முழுக்க   அவர்களுக்கே ஓட்டு போட வேண்டும் என்பதும், அப்படி இல்லை என்றால் மக்கள் நன்றி கெட்டவர்கள் ஆகிவிட்டார்கள் என்பதும் ஜனநாயகத்துக்கு முற்றிலும் எதிரான கருத்து. நான் ஓட்டுப் போட்ட த.வெ.க-வுக்கும் இது பொருந்தும்.  அவ்வளவு பெரிய கட்சிகளையே வீட்டுக்கு அனுப்பிய மக்கள், தன்னையும் அனுப்பத் தயங்க மாட்டார்கள் என்ற பயம் திரு. விஜய் அவர்களுக்கும் இருக்க வேண்டும்.

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

"தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை." "நண்டு படத்தை இயக்கியவர் மகேந்திரன்." மேற்காணும் இரண்டு கூற்றுகளும் உண்மைகள் (facts).   அழகம்பாளையம் தனசேகரிடம் கேட்டாலும் அதைத்தான் சொல்லுவார், அஞ்சானூர் தமிழன்புவிடம் கேட்டாலும் அதைத்தான் சொல்லுவார். (தமிழ்நாட்டின் தலைநகரம் மதுரை என்று தவறாகச் சொல்பவர்களும் இருப்பார்கள். அதுவும் உண்மையில்லை. தலைநகரம் சென்னை என்று தெரிந்தும் ஒருவர் அப்படிச் சொன்னால் அது பொய்.)   இன்னும் இரண்டு கூற்றுகள். "சென்னை ஓர் அழகான ஊர்." "நண்டு  படம் நன்றாக இருக்காது." இந்த இரண்டு கூற்றுகளும் கருத்துகள் (opinions). தனசேகரைப் பொறுத்தவரை சென்னை அழகான ஊராக இருக்கலாம். ஆனால், தமிழன்பு அதை ஓர் அழகற்ற ஊரென நினைக்கலாம்.  அதேபோல்தான் நண்டு படம் குறித்த கருத்தும்.  ... பொதுவாக வாக்குவாதங்களில் தத்தம் கருத்துகளைச் சொல்பவர்கள் செய்யும் தவறுகள் இரண்டு. 1) அவை தம்முடைய கருத்துகள் மட்டுமே என்பதையோ, தன்னுடைய கருத்து என்பதாலேயே அது உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதையோ ஏற்க மறுப்பது. 2) கருத்துகளை நிறுவ உண்மைகளைச் சொல்லாமல், மேலும் தங்களுடைய கரு...

ஒரு பணக்கார வீட்ல நாம இருக்கோம்னு வையிங்க. வீட்டு வேலைக்கு ஆள் எடுக்கறோம் ஒருநாள். அங்க ஒருத்தன்  நம்மகிட்டயே பத்து ரூவா குடுத்துட்டு கண்ணடிக்கிறான். கையில வாங்குன காச எச்சில் ஒழுகப் பாத்துட்டே வீட்டுச் சாவிய அவன்கிட்ட தர்றோம். அதே நாமதான் வாய்கிழிய பேசறோம் - அரசியல்வாதிக எல்லாம் அயோக்கியர்கள்னு. அடிமுட்டாள்கள் அயோக்கியர்களால்தான் ஆளப்படுவார்கள்.

தாங்கள் மட்டமானவர்கள் என்று நிரூபிக்க  பணம் செலவு செய்வோர் இரண்டு பேர். பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஃபோன் செய்து தங்களிடம் அட்மிஷன் போடச்சொல்லி நச்சரிக்கும் கல்லூரிகள்.  ஓட்டுக்கு காசு தரும் கட்சிகள்.