Posts

Showing posts from June, 2024

மறக்குமா நெஞ்சம்?

அந்தப் பசுமையான மரத்திலிருந்து காகிதப் பூக்கள் ஒரு தாளகதியுடன் விழுந்து கொண்டிருந்தன. உண்மையில் 'விழுந்து' கொண்டிருந்தன என்று சொல்வது சற்றே வன்முறையான வார்த்தை. புவியீர்ப்பு விசை மற்ற பொருட்களின் மீது செயல்படுவது போல் அல்லாமல் அந்தப் பூக்களின் மீது மட்டும் சற்றே நிதானத்துடன் விசையைச் செலுத்தியதோ என்று ஒரு குழப்பம் தோன்றும் வகையில் அவை ஒரு நளின நடனத்துடன் மிதந்து வந்து தரையில் படர்ந்து கொண்டன. நான் ஹெட்போனில் கேட்டுக் கொண்டிருந்த 'வெண்மதி வெண்மதியே நில்லு' பாட்டுக்குத் தோதாக அந்தப் பூக்கள் அசைந்தாடின. மேலும், அம்மரமே அந்தப் பூக்களைப் பார்த்துப் பாடுவதைப் போல, அவ்வளவு பாங்குடன் அப்பாடலின் வரிகள் அந்தச் சூழலுக்குப் பொருத்திப் போயின. எனக்கு அது ஆச்சர்யமாகவே இல்லை. இந்த மாதிரி தற்செயலான நிகழ்வுகள் எனக்கு அடிக்கடி நிகழும். மற்றவரிடம் சொன்னால் நம்பவே முடியாததாய் இருக்கக் கூடிய தற்செயல்கள். நான் மகிழ்ச்சியாய் இருக்கும் போது மட்டுமே நிகழ்பவை அவை.  என்னுடைய செல்போனில் இருந்த அத்தனை பாடல்களையும் டெலீட் செய்துவிட்டு, கௌதம் மேனனின் படத்தின் எல்லாப் பாடல்களையும் பதிவிறக்கி, அந்தப் பா...