சிறுகதை அறிமுகம் - எறாக்கறி புறாக்கறி - பாக்கியம் சங்கர்
09.03.2022 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியாகியிருக்கும் பாக்கியம் சங்கரின் 'எறாக்கறி புறாக்கறி' என்னும் இந்தக் கதை அனைவராலுமே படிக்கப்பட வேண்டிய கதை என்பேன். அந்தக் கதையின் ஒரு சிறு பகுதியைக் கூட நான் இங்கே சொல்லப் போவதில்லை. மாறாக, அந்தக் கதையை ஏன் அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்கான 6 காரணங்களைப் பட்டியலிட விழைகிறேன். 1. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சொன்னது இது. "இந்த உலகம் மிகவும் அபாயகரமானது. அதற்கு காரணம் யார் தெரியுமா? தீமை செய்பவர்கள் அல்லர். தீமை நடப்பதைப் பார்த்தும் அதைத் தட்டிக் கேட்காதவர்கள்தான்". 'நமக்கெதுக்கு வம்பு' என்று ஒதுங்கிப் போகாமல், தீமைக்கு எதிராகத் தன் உரத்த குரலைப் பதிவு செய்யும் ஒரு ஹீரோவைப் பற்றிய கதை இது. 2. இந்தக் கதையில் ஹீரோ அனுபவிக்கும் வலியை, நீர் குடித்து உயிர் வாழும் நம் எல்லோராலுமே மிகச் சுலபமாக உணர முடியும். 3. 'இதையெல்லாமா வெட்டவெளியில் பேசுவது' என்று பெரும்பான்மையோரால் கருதப்படக் கூடிய கதைக்கரு இந்தக் கதையை உலக இலக்கியமாக்குகிறது. 4. முக்கால்வாசி கதையைப் படிக்கும் வரையிலும், ஹீரோவின் துயரங்களைக் கண்டு சோகம் வடிக்கு...