பொய்மை

உண்மையாயிருந்ததால்,

காயப்பட்டோரே--
ஒதுக்கப்பட்டோரே--
கண்ணீர் உகுத்தோரே--

பொய்யொன்றும்
பாதகமில்லை ஐயா!

உண்மையைப் போலன்றி,
பொய் கொஞ்சம் கருணையுள்ளது;
முகத்திலறையாதது;
இடம் பொருள் ஏவலறிந்தது;
புரைதீர்ந்த நன்மை பயப்பது;
ஆறுதலளிப்பது;
சுவாரஸ்யம் சேர்ப்பது;
இரசிக்கத் தக்கது;
மனிதத் தன்மை மிக்கது;
கவிதைக்கானது;
காதலுக்கானது;
ஹாஸ்யமானது;

அதி முக்கியமாக,
உண்மையைச் சீரணிக்கும் பக்குவம்
உலகார்க்கெலாம் வாய்க்கும் வரையிலும்,
வாழ்க்கையை அழகு செய்வது,
பொய்.

உள்மனதில் உறையட்டும் உண்மை,
உதட்டில் சற்று விளையாடட்டுமே பொய்!

Comments

Post a Comment

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?