"தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை." "நண்டு படத்தை இயக்கியவர் மகேந்திரன்." மேற்காணும் இரண்டு கூற்றுகளும் உண்மைகள் (facts). அழகம்பாளையம் தனசேகரிடம் கேட்டாலும் அதைத்தான் சொல்லுவார், அஞ்சானூர் தமிழன்புவிடம் கேட்டாலும் அதைத்தான் சொல்லுவார். (தமிழ்நாட்டின் தலைநகரம் மதுரை என்று தவறாகச் சொல்பவர்களும் இருப்பார்கள். அதுவும் உண்மையில்லை. தலைநகரம் சென்னை என்று தெரிந்தும் ஒருவர் அப்படிச் சொன்னால் அது பொய்.) இன்னும் இரண்டு கூற்றுகள். "சென்னை ஓர் அழகான ஊர்." "நண்டு படம் நன்றாக இருக்காது." இந்த இரண்டு கூற்றுகளும் கருத்துகள் (opinions). தனசேகரைப் பொறுத்தவரை சென்னை அழகான ஊராக இருக்கலாம். ஆனால், தமிழன்பு அதை ஓர் அழகற்ற ஊரென நினைக்கலாம். அதேபோல்தான் நண்டு படம் குறித்த கருத்தும். ... பொதுவாக வாக்குவாதங்களில் தத்தம் கருத்துகளைச் சொல்பவர்கள் செய்யும் தவறுகள் இரண்டு. 1) அவை தம்முடைய கருத்துகள் மட்டுமே என்பதையோ, தன்னுடைய கருத்து என்பதாலேயே அது உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதையோ ஏற்க மறுப்பது. 2) கருத்துகளை நிறுவ உண்மைகளைச் சொல்லாமல், மேலும் தங்களுடைய கரு...
ராமசாமி வாத்தியார் அயலூர் ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி, நாமக்கல் பாளையம் - என்ற சொற்றொடரைப் படித்து முடிப்பதற்குள்ளாகவே முழுப் பள்ளிக்கூடத்தையும் சுற்றி வந்து விடலாம். அவ்வளவு சிறியதுதான் நான் படித்த பள்ளி. அங்கே எங்களுக்குப் பாடம் சொன்ன ஆசிரியர்களில் மூவர் மட்டுமே என் நினைவில் நிற்கிறார்கள். அதில் முதலாமவர் ராமசாமி வாத்தியார். அவருக்கு அறுபது வயதுக்கு மேல் இருக்கும். பத்து வயதுக்கும் கீழிருந்த குழந்தைகளுக்கு அறுபது வயது ஆசிரியர் என்பதே எவ்வளவு அழகான சூழ்நிலை! அவருக்கும் எங்களுக்குமான உறவு, ஒரு தாத்தாவுக்கும் பேரப் பிள்ளைகளுக்குமான உறவாகவே இருந்தது. வெள்ளை வேட்டி சட்டையில்தான் வருவார்; எங்களுடன் சேர்ந்து க்ரிக்கெட் விளையாடுவார்; 'கொல கொலயா முந்திரிக்கா' என்ற விளையாட்டை எங்களுக்கு சொல்லித் தந்தவரும் அவரே. எவ்வளவு சிரத்தையெடுத்து யோசித்தாலும், அவர் எங்களுக்குப் பாடம் நடத்தியதான நினைவு ஒன்று கூட வரவில்லை. பிறகு என்னதான் செய்வார்? கதைதான். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான குழந்தைகள் அனைவரையும் சேர்த்து மொத்தப் பள்ளியின் மாணவர் எண்ணிக்கையே முப்பதோ நாற்பதோதான் இ...
இப்போது தீர்ப்பு வந்துள்ள ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கை எடுத்துக்கொள்வோம். அந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒன்பது காவலர்களுக்கும் இரட்டை மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதை வாட்ஸேப் ஸ்டேட்டஸில் பதிவிடும் பலரும் "நீதி வென்றது" என்று பதிவிட்டு வருகிறார்கள். முதலில் எதிலெல்லாம் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை என்பதைச் சொல்லிவிடுகிறேன். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவ்வாறு தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படும் போது அது பாராட்டப்பட வேண்டும். அதிலே இரண்டாம் கருத்தே இல்லை. இப்போது தண்டனை என்பதன் நோக்கம் என்ன என்று பார்ப்போம். பள்ளிக்குள்ளே குப்பை போட்டால் பத்து ரூபாய் அபராதம் என்று வைத்துக் கொள்வோம். அதன் நோக்கம் பத்து ரூபாயை இழப்பதற்கு அஞ்சி யாரும் குப்பை போடக்கூடாது என்பதேயொழிய, அந்தப் பணத்தை கூலியாட்களுக்குக் கொடுத்து குப்பையை அள்ளிப் போடலாம் என்பதல்ல. இந்த உதாரணத்தில் பிரச்சினை குப்பை இல்லை. குப்பை போட வேண்டும் என்று ஒருவர் மனதில் தோன்றும் எண்ணமே தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை. தொடர்ந்து நூறு வருடங்களுக்கு அந்தப் பள்ளியில் தினந்தோறும் பத்து பத்த...
Comments
Post a Comment